Saturday, February 26, 2005

ஆறாம் புலன்


கரையும் மெளனநொடிகளில்
அவனுக்கு அடிக்கடி கேட்பதுண்டு
அவள் யோசிக்கும் சப்தம்

ஏய் கந்தசாமி!


ஏய் கந்தசாமி,
இங்க வந்து குந்துசாமி,
இளமை என்பான் புதுமை என்பான்,
இப்பவே அனுபவிச்சுடு என்பான்
அப்படி ஒன்னு மட்டும் பண்ணிட்டியோ
நாயேம்பான் பேயேம்பான்
நாலெழுத்து படிச்சிருந்தும் இப்படி
நாலெழுத்து நோய்வந்து சாகப்போறியேம்பான்
அவனே மனசை தேத்தும்பான்
நடக்காதது நடந்துடுச்சும்பான்
நடந்தது நடந்துபோச்சும்பான்
நடக்கிறத நல்லதா பார்த்துக்கோம்பான்
நாக்கு நாலுவிதமாத்தான் பேசும்
அறிவு உனக்கு ஆரம்பத்திலிருந்து வேலை செய்யனும்
நாக்குக்கு பயந்துகிட்டு தூக்குல தொங்குறவனும்
நாய்க்கு பயந்து மரத்துல தொங்குறவனும்
ஒன்னாயிருவானா?
துக்கப்படற மனசுக்கு ஆறுதல் சொல்லிட்டு
தூக்கிகட்டின வேட்டிய இறக்கிவிடு!
போறபோக்குல பொன்னம்மாவ பார்த்தா தப்பில்ல,
ஆனா,
பொன்னம்மாவையே பார்த்திட்டிருந்தா தப்புதான், இல்ல?!

Sunday, February 20, 2005

அறிமுகம்



வணக்கம் ,

உங்களையெல்லாம் சந்திப்பதற்க்கு
அடிப்படை தமிழறிவு இருந்தால் போதும் என்றார் நண்பர் சிவா.
அது எனக்கு இருப்பதாகவும் சொன்னார்.
அதிக பிழையின்றி அவர்க்கு நான் எழுதிய கடிதங்கள் அந்த நம்பிக்கையை தந்திருக்க வேண்டும்.
இருந்தாலும் "கூட்டத்துல கட்டு சோறை அவிழ்க்கவேணாம்னு" சொன்னேன்.
அவர் கேட்கவில்லையென்று இதை படிக்கும் நேரம் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்

நான் சொன்னதை அவர் கேட்டிருக்கலாம் என்று இனி படிக்கும்போதெல்லாம் உணர்வீர்கள்

அன்புடன்
குணா