Tuesday, March 18, 2008

கோட்சேயின் குண்டுகள் !!!


ஹே ராம்
இதயம் தொட்டவரின்..
இதயம் தொட்டவை,
கோட்சேயின் குண்டுகள்.

பூகம்பம்
இல்லாத வழக்கமாய்,
இரண்டு முறை...
இறுதி சடங்கு.

வாலிபன்
கடற்கரையில் தனிமை..
காதலிக்காக அல்ல,
இன்னும் விற்காத சுண்டலுக்காக...

First Experience
ஒரு மழலைக்கும்    தெரியும் !!!
தடுப்பூசியின் வலியும் 
தாய்ப்பாலின் ருசியும் 

இலவசம்
கட்டணம் செலுத்தி
உறங்கிய விடுதியில்
கனவுகள்


என் பழைய ஞாபகத்திலிருந்து...,

நன்றி.

Friday, March 14, 2008

அன்பு பண்பு என்பு தண்ணீர்

என்ன தலைப்பு இது?

புரியாமல் இன்னோரு புதுகவிதையா ?
மரபிலக்கணம் செறிந்த தமிழ் உரைநடையா ?
ஆனந்த விகடனில் அடுத்து வரவிருக்கும் பிரபலத்தின் கட்டுரையா ?
இல்லை இல்லை இல்லை -- இல்லை,யுவர் ஹானர்,
சில வருடங்களுக்கு பின் வலைப்பூ உலகில் திரும்ப வந்திருக்கும் நான்
--தமிழ் பயிற்சி செய்த முதல் சில வார்த்தைகள்----

அரி நிம்பள்கி கோபம் வர்ரான்,
அரி நம்பள் ரீசன் சொல்றான்.

என்னுடைய இவ்வளவு நீண்ட இடைவெளிக்கு பல காரணங்கள்.அதில் முதன்மையானது,
தமிழில் வலையேற்ற நான் தலையால் தண்ணீர் குடித்ததுதான்.
அது சரி,இதுக்கு முன்னால அப்படி என்ன தான் பதிவு இருக்குன்னு பாத்தீங்கன்னா,

திரும்பவும்,
நிம்பள்கி கோபம் வர்ரான்,
திரும்பவும்,
நம்பள் ரீசன் சொல்றான்.

ரீப்பீட்டு, த- வ- நா- த- த- குடித்ததுதான்.

அன்பை சொல்ல முடியாமல் தவித்த உள்ளங்களுக்கிடையே,
"அன்பு" என எழுத முடியாமல் தவித்த உள்ளம்.
பண்பை இழந்து நிற்கும் சமூகத்தில்,
"பண்பு" என பதிவிட துடித்த மனம்.
என்பு என்று எழுதியபின்,எப்படி அதை தலைப்போடு இணைப்பதுஎன்று யோசித்து,
பின், இணைக்க வேண்டும் என்று சட்டமா ?என சுயதெளிவு அடைந்த தர்க்கம்.
"தண்ணீர்" பற்றி நாம் சொல்லித்தானா, இந்த நானிலம் அறியவேண்டும் ?இருந்தாலும்,எழுதிட்டானே,ஏதாவது தேறாதா என்று என் மூளை மடிப்புகளில் தேடி,
உங்களைப் போல வெறுப்புற்ற என் அகம்.

மன்னிக்க,

சும்மா ஏதாவது எழுதி ஆரம்பிக்க ஆசை,அவ்வளவுதான்.

நன்றி